search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானப்படை அதிகாரி"

    • சகஸ்ரநாமம் இந்திய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.
    • வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மனம்பாளையம் டான்சா நகரை சேர்ந்தவர் சகஸ்ரநாமம் (வயது 70). இவர் இந்திய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்.

    சகஸ்ரநாமம் மட்டும் தனியாக வசித்து வந்தார்.இந்தநிலையில் இவரது வீட்டில் இருந்து தூர்நாற்றம் வந்தது.இதனால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினர் இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று எங்கு இருந்து துர் நாற்றம் வருகிறது என பார்த்தனர். அப்போது சகஸ்ரநாமம் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதை போலீசார் கண்டு பிடித்தனர். அவரது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

    இதனையடுத்து போலீசார் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். வீட்டிற்குள் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி இறந்து கிடந்தார். அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று சகஸ்ரநாமம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×